
வாழைச்சேனை, ஏப் 11
வாழைச்சேனை கடதாசி தொழிற்சாலையில், A-4 காகித உற்பத்தி நடவடிக்கை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய கடதாசி கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் ஜயம்பதி பண்டார ஹூன்கந்த தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஜயம்பதி பண்டார ஹூன்கந்த குறிப்பிடுகையில்,
முதற்கட்ட A-4 காகிதங்கள் உரிய தரத்துடன் வெற்றிகரமாக தயாரிக்கப்பட்டுள்ளன. மூலப்பொருட்களை பெற்றுக்கொள்வதில் மாத்திரம் சிக்கல் உள்ளது.
எவ்வாறாயினும், அரசாங்கத்தின் உதவியுடன், மூலப்பொருட்களை பெற்று காகித உற்பத்தி நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் என்றார்.