
மூன்றாவது நாளை எட்டியுள்ள காலிமுகத்திடல் மற்றும் ஜனாதிபதி செயலக முன்றலில் நடைபெறும் ஆர்ப்பாட்டம் கடும் மழையினையயும் பொருட்படுத்தாமல் இரவு பகலாக தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் எதிர்வரும்தமிழ் சிங்கள புத்தாண்டை கொண்டாடுவதற்கு ‘கோட்டகோகம’ கிராமத்திலிருந்து அனைத்து இலங்கையர்களுக்கும் அழைப்பு விடுப்பதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர்.