ஜனாதிபதியை பதவி விலக்க வேண்டுமென்ற கொள்கையை விதைத்தவர் அனுரகுமார திசநாயக்கவே! அம்பலமான உண்மை 

இன்று போராடும் இளைஞர்கள் மத்தியில் ஜனாதிபதியையும் அரசாங்கத்தையும் பதவிவிலக்கவேண்டும் என்ற கொள்கையை முன்வைத்தவர் ஜேவிபியின் தலைவர் அனுரகுமாரதிசநாயக்கவே என கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி தெரிவித்துள்ளார்.

மக்கள் மத்தியில் ஊழல் குறித்து ஜேவிபி தலைவர் வெளிப்படையாக பேசியிருக்காவிட்டால் நாட்டை எப்போதோ விற்றிருப்பார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

ஊழல்களை அம்பலப்படுத்தியவர் அனுரகுமாரதிசநாயக்கவே – இது வீதியில் இறங்கி போராடும் தோழர்கள் பலருக்கு தெரியாது.

ஊழலை தடுக்கும் கொள்கையை உங்கள் மத்தியில் விதைத்தவர் அனுரகுமாரதிசநாயக்கவே.

அவர் அப்படி செயற்பட்டிருக்காவிட்டால் ஊழல்வாதிகள் நாட்டை தொடர்ந்தும் ஆட்சிசெய்துகொண்டிருந்திருப்பார்கள்.

நாட்டை ஏற்கனவே விற்றிருப்பார்கள்- என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *