ரம்புக்கன புகையிரத நிலையத்தில் விபத்து! பெருமளவில் வீணாகும் டீசல்

ரம்புக்கன புகையிரத நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டீசல் தாங்கியின் மீது, பின்னால் இருந்து வந்த தொடருந்து இயந்திரமொன்று மோதியதில் விபத்து நேர்ந்துள்ளது.

இன்று (11) காலை இடம்பெற்ற இந்த விபத்தைத் தொடர்ந்து, டீசல் தாங்கியில் எரிபொருள் கசிவு ஏற்பட்டுள்ளதாகவும், அதனை தொடர்ந்து எஞ்சியுள்ள டீசல் கையிருப்பு பவுசர்களில் ஏற்றப்பட்டு வருவதாகவும் ரம்புக்கன புகையிரத நிலைய பேச்சாளர் தெரிவித்தார்.

பேராதனைக்குக் கொண்டு செல்வதற்காக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டீசல் தாங்கியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *