இலங்கையில் மனித உரிமை மனித நேயம் தொலைந்துவிட்டது– மட்டு அம்பாறை கத்தோலிக்க மறைமாவட்ட ஆண்டகை வணபிதா யோசெப் பொன்னையா

(கனகராசா சரவணன்)

இலங்கையில் மனித உரிமை மனித நேயம் தொலைந்துவிட்டது மனித உரிமை மீறல்கள் அநியாயங்கள் மறையவேண்டும் எனவே இப்படியான நிலை எல்லாம் மாறவேண்டும் என்றால் இதற்கா நாங்கள் போராட வேண்டும் என மட்டு அம்பாறை கத்தோலிக்க மறைமாவட்ட ஆண்டகை வணபிதா யோசெப்பொன்னையா தெரிவித்தார்.

மட்டக்களப்பு எகட் நிறுவனத்தின் அனுசரணையுடன் பல்சமய ஒன்றியத்தின் ஏற்பாட்டில் ‘இறைவா எமது நாட்டை பொருளாதார வீழ்சியல் இருந்தும் ஏனைய அழிவில் இருந்தும் பாதுகாத்தருளும் பல் இன பல சமய மக்கள் ஒற்றுமையாக வாழ அருள்தருவாய்’ எனும் தொனிப் பொருளில் அரசுக்கு எதிராக நேற்று ஞாயிற்றுக்கிழமை (10) தாண்டவன்வெளி அந்தோனியார் ஆலயத்துக்கு முன்னால் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இன்று நாடு ஒரு இக்கட்டான நிலைக்கு சென்று கொண்டிருக்கின்றது அமைதி, சமாதானம், மகிழ்சி இல்லை அனைவரின் வாழ்விலும் சோகம் நிறைந்திருக்கின்றது இதற்கு அடிப்படை காரணம் என்ன எங்களை ஆண்டவர்கள் இவ்போது ஆண்டு கொண்டிருப்பேர்கள் இனி ஆளாப்போவர்கள் மக்கள் நலனில் அக்கறை இல்லை இதனால் மக்கள் இன மத வேறுபாடு இன்றி துன்பங்களையும் வேதனைகளை அனுபவித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

ஆயிரக்கணக்கான மக்கள் பசியால் பட்டினியால் துன்பத்தால் வாடிக் கொண்டிருக்க வேண்டியதில்லை எல்லா நாளும் நிறை உணவு கிடைத்துக் கொண்ட இந்த நாடு எல்லா வளங்களும் உள்ள நாடு ஆனால் இப்போது எரிபொருள் இல்லை சாப்பாடு, மா, ரொட்டி இல்லை என இல்லை இல்லை என சொல்தான் வந்து கொண்டிருக்கின்றது.

எனவே இது எப்போது முடிவடையப் போகின்றது மனிதன் மனிதனை மதித்து வாழவேண்டும் எங்களை ஆளுகின்றவர்கள் ஒவ்வொரு மனிதனையும் இன மத வேறு பாடு இன்றி மதிக்க வேண்டும் அதற்கா இறைவனை பிராத்திப்போம்.

பயங்கரவாத தடைச்சட்டம் கொண்டுவந்து எத்தனையோ மக்களை காணமல் ஆக்கிவிட்டார்கள், போட்டோ வைத்திருந்தாலும் உடன் கைது செய்கின்றனர். எனவே இவ்வாறான மனித உரிமை மீறல்கள் அநியாயங்கள் மறைய வேண்டும். இப்படியான நிலை எல்லாம் மாற வேண்டும்.

அதேவேளை மனிதனை மனிதன் மதிக்காமல் மனித உரிமையை கொடுக்காமல் வாழுகின்றான் இதனால் மனித உரிமை மனித நேயம் தொலைந்துவிட்டது. அதனை நாங்கள் தேடவேண்டும் இதற்கா நாங்கள் போராடவேண்டும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *