
காணி விடுவிப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு மக்கள் இன்று போராட்டத்தை முன்னெடுத்துள்ள நிலையில், சமூகம் மீடியாவுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
நாட்டை விற்ற அரசாங்கம் ,சீன நாட்டவர்களை இங்கு கொண்டுவந்துள்ளனர்.
அவர்கள் கொரோனா ஊசி என்ற பெயரில் ஏதோ செய்துவிட்டார்கள்.
பிள்ளைகளின் வாழ்க்கை தரத்தினை மேன்மைப்படுத்த முடியவில்லை.
இதற்கெல்லாம் என்ன செய்ய போகிறீர்கள் . கோட்டா எமக்கு வேண்டாம் ,நாட்டை விட்டு வெளியேற வேண்டும். கோட்டா இருந்தால் நாடு இன்னும் அழிவுக்குள்ளாகும்
கோட்டா ஆட்சியில் இருந்தால் பிள்ளைகளை படிப்பிக்க முடியாது. கொப்பி வாங்க முடியாது.எவ்வளவற்றை அனுபவித்து விட்டோம் இனியும் எங்களால் முடியாது.
ஜனாதிபதி எங்களை நடு வீதியில் விட்டு விட்டார். இந்த வீதியிலேயே தான் எங்கள் உயிர் போகும்.
அதேவேளை அரசாங்கம் மாற வேண்டும் இல்லையேல் பொருளாதாரத்தை சீராக்க வேண்டும் அதுவரையிலும் இந்த போராட்டத்தினை கைவிட மாட்டோம் என்றனர்.