அனுமதிப்பத்திரமின்றி எரிபொருள் விற்ற முதியவர் கைது!

எட்டியாந்தோட்டை பிரதேசத்தில் அனுமதிப்பத்திரமின்றி எரிபொருள் விற்பனை செய்தார் என்ற குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (10) எட்டியாந்தோட்டை – கபுலுமுல்ல பிரதேசத்தில் பொலிஸாரால் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதே பகுதியைச் சேர்ந்த 68 வயதான நபரே கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் அந்நபரிடமிருந்து 75 லீற்றர் பெற்றோலும் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேக நபர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் 19 ஆம் திகதி ருவன்வெல்ல நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

மேலதிக விசாரணைகளை எட்டியாந்தோட்டை பொலிஸார் முன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *