கட்டுநாயக்க விமான நிலைய ஊழியர்களும் வேலை நிறுத்த போராட்டம் !

கட்டுநாயக்க விமான நிலைய ஊழியர்கள் இன்று காலை 9:30 மணி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சம்பள பிரச்சினை மற்றும் மேலதிக கொடுப்பனவு போன்ற கோரிக்கைகளை முன்வைத்து குறித்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

எவ்வித அரசியல் கட்சிகள் அல்லது தொழிற்சங்க கோரிக்கைகளும் இல்லாமல் அனைத்து விமான நிலைய ஊழியர்களும், வேலைநிறுத்த போராட்டத்தில் இணைந்துள்ளனர்.

பணிப் புறக்கணிப்பு மற்றும் எதிர்ப்புப் போராட்டம் இடம்பெற்றாலும் விமான நிலையத்தின் அன்றாட நடவடிக்கைகளுக்கு இதுவரை இடையூறு ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *