யாழ்ப்பாணம் இந்து ஆரம்ப பாடசாலையில் அமைக்கப்பட்ட சிவலிங்கபெருமானுடன் கூடிய நந்தியெம்பெருமான் திருக்கோயிலின் அபிஷேகப் பெருவிழா இன்று இடம்பெற்றுள்ளது.
பாடசாலை வளாகத்துக்குள் அமைக்கப்பட்ட மங்களநாதர் திருக்கோயில் கும்பாபிஷேகம் இன்று இடம்பெற்றது.
பாடசாலைக் காலத்திலே சைவத்தை வளர்க்கும் நோக்கில் அமைக்கப்பட்ட இந்த ஆலயத்துக்கு நல்லை ஆதீன குருமுதல்வர், பேரூர் ஆதீனாம் சீர்வளர்சீர் சாந்தலிங்க மருதாசல அடிகளார், சிவகுரு ஆதீன குருமுதல்வர், தென்கயிலை ஆதீன குருமுதல்வர் உள்ளிட்டோர் அருளாசி வழங்கியுள்ளனர்.

