நீர்த்தேக்கத்தில் மிதந்த பெண்ணின் சடலம்!

மகாவலி ஆற்றின் விக்டோரியா நீர்த்தேக்கத்தில் அடையாளம் காணப்படாத பெண்ணொருவரின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.

தலாத்துஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியிலே குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தலாத்துஓயா பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலையடுத்து சடலம் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் 40 மற்றும் 45 வயதுக்கு இடைப்பட்டவர் எனவும், அவர் வெள்ளை மற்றும் சிவப்பு கலந்த சட்டை மற்றும் வெள்ளை பாவாடை அணிந்திருந்ததாகவும், அவரது அடையாளம் உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *