
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையில் ஆட்சிமாற்றமொன்றை கோரி நாடளாவிய ரீதியில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், நாட்டுக்கு சுற்றுலா மேற்கொண்டுள்ள வெளிநாட்டு பயணிகளும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கமைவாக காலி- கொழும்பு பிரதான வீதி, அக்குறல பாலத்துக்கு அருகில் இன்று காலை வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அரசாங்கத்துக்கு எதிரான பதாதைகளை தாங்கியவாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இலங்கையில் அமுல்படுத்தப்படும் மின்வெட்டு நடைமுறை காரணமாக தாம் பாதிக்கப்பட்டுள்ளதாக இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.