நாட்டின் தற்போதய நிலையில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் பல்வேறு தேவைகளுக்கும் வரிசையில் நிற்கும் நிலை உருவாகியுள்ளது.
இவ்வாறான பின்னணியில் மக்களின் மருத்துவ தேவைகளை பூர்த்தி செய்யமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதையும், மருந்து பொருட்களின் தட்டுப்பாட்டு நிலையினையும் வெளிக்காட்டும் முகமாக இன்று காலை 11 மணியளவில் மாங்குளம் வைத்தியசாலை மருத்துவர்கள் ஊழியர்கள் இணைந்து மாங்குளம் வைத்தியசாலை முன்பாக இந்த கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்
இந்த போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள், மருத்துவம் மக்களின் அடிப்படை உரிமை, மக்களின் உயிர்களுடன் விளையாட வேண்டாம், மருத்துவப் பற்றாக்குறையை நிவர்த்திசெய், இலவச சுகாதாரம் ஆபத்தில் உள்ளது, அனைவரது உயிர்களும் ஆபத்தில் உள்ளது, இன்று இலவச மருத்துவம் இழந்த நிலையில் இலங்கை மக்கள் போன்ற வாசகங்கள் எழுதிய பதாதைகளை தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

