தமிழ்த் தேசிய அணிகளுக்கு எதிராக பொதுமக்களுடன் வீதியில் இறங்குவோம்- சிவாஜிலிங்கம் எச்சரிக்கை.

தமிழ்த் தேசிய அணிகளுக்கு எதிராக பொதுமக்களை திரட்டி வீதியில் இறங்குவோம் என முன்னாள் வடமாகான சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

இன்றையதினம்(11) யாழில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்தார்.

விகிதாசார தேர்தல் முறையில் கூட கடந்த நல்லாட்சியில் பேரம்பேசும் உரிமை இருந்தும் அரசியற் கைதிகளின் விடுதலை,பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குதல் போன்றவற்றையாவது பெறத் தவறிவிட்டோம்.இனிமேல் அதைச் செய்ய முடியாது. அவ்வாறான நிபந்தனைகள் விதிக்காது இனிமேல் தமிழ்த்தேசிய அணிகள் ஏதாவது நம்பிக்கையில்லா பிரேரணை அல்லது நிறைவேற்று நிர்வாக முறை ஒழிப்பு அல்லது அவநம்பிக்கை பிரேரணை என்று சென்றால் அந்த அணிகளுக்கு எதிராக நாங்கள் பொதுமக்களைக் கொண்டு வீதியில் இறங்க நிர்ப்பந்திக்கப்படுவோம் என்பதை பகிரங்கமாக கூற விரும்புகின்றேன் என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *