இன்சுலீன் மருந்துக்கு பாரிய தட்டுப்பாடு!

கொழும்பு லேடி ரிஜ்வே வைத்தியசாலையில், சிறுவர்களுக்காக பயன்படுத்தப்படும் விசேட இன்சுலீன் மருந்துக்கு பாரிய தட்டுப்பாடு காணப்படுவதாகவும் கூறப்படுகின்றது.

எனவே அதனை நன்கொடை வழங்க முன்வருமாறு வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ஜீ.விஜேசூரிய வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வைத்தியசாலையில் சாதாரண இன்சுலீன் போதுமானளவு கையிருப்பில் இருப்பதாகத் தெரிவித்த அவர், விசேட இன்சுலினுக்கே தட்டுபாடு ஏற்பட்டுள்ளதாகவும் கூறினார்.

இந்த மருந்து வகையைப் பெற்றுக்கொள்வதற்காக சமூக வலைத்தளங்கள் ஊடாக நன்கொடையாளர்களால் நிதி சேகரிக்கப்படுவதாகவும் தெரிவித்த அவர், அவ்வாறு சேகரிக்கப்படும் நிதியிலிருந்து 11 இலட்சம் ரூபாய் பெறுமதியான இன்சுலீன் நாளை வைத்தியசாலைக்கு வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *