இலங்கை மின்சார சபை வெளியிட்ட மகிழ்ச்சித் தகவல்!

கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழை காரணமாக நீர் மின் உற்பத்தி 4 வீதத்தினால் அதிகரித்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

அதன்படி காசல்றீ, மவுஸ்ஸாகலை, கொத்மலை, விக்டோரியா, ரந்தெனிகல மற்றும் சமனலவெவ நீர்த்தெக்க பகுதிகளில் போதிய அளவு மழை பெய்துள்ளமையினால் நீர்த்தேக்கங்களில் குறிப்பிடத்தக்க அளவு நீர்மட்டம் உயர்வடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், எதிர்வரும் நாட்களிலும் தொடர்ச்சியாக மழை பெய்யுமானால் நீர் மின் உற்பத்தியை மேலும் அதிகரிக்க முடியும் எனவும் இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *