கொழும்பு – காலி முகத்திடலில் 4ஆவது நாளாகவும் தொடரும் போராட்டம்!

அரசாங்கத்திற்கு எதிராக காலி முகத்திடலில் சனிக்கிழமை ஆரம்பிக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் நான்காவது நாளாக இன்றும் (திங்கட்கிழமை) தொடர்கின்றது.

அதிகளவானோர் காலி முகத்திடலிலும் ஜனாதிபதி செயலக வளாகத்திற்கு முன்பாக கூடியும் தொடர்ச்சியாக தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தி வருகின்றனர்.

அரசாங்கம் உடனடியாக பதவி விலக வேண்டும், பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பதாதைகளை ஏந்திய வண்ணம் அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் குறித்த பகுதிகளில் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு கூடாரங்கள், உணவு, தற்காலிக மலசலகூட வசதிகள் போன்றவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *