மின்தடை குறித்து வெளியான தகவல்

நாட்டில் இன்றைய தினம் 4 மணித்தியால மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதற்கமைய A தொடக்கம் L வரையான வலயங்களுக்கு காலை 08.30 தொடக்கம் மாலை 05.30 வரையான காலப்பகுதியில் இரண்டு மணித்தியாலமும் 15 நிமிடங்களும் மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

அத்துடன், குறித்த வலயங்களில் மாலை 05.30 முதல் இரவு 10.45 வரையான காலப்பகுதியில் ஒரு மணித்தியாலமும் 45 நிமிடங்களும் மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

மேலும் P முதல் W வரையான வலயங்களுக்கு காலை 10.45 தொடக்கம் மாலை 05.30 வரையான காலப்பகுதியில் இரண்டு மணித்தியாலமும் 15 நிமிடங்களும் மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

அத்துடன், குறித்த வலயங்களில் மாலை 05.30 முதல் இரவு 10.45 வரையான காலப்பகுதியில் ஒரு மணித்தியாலமும் 45 நிமிடங்களும் மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

அத்துடன், CC1 வலயத்தில் மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்பட மாட்டாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை, நாடளாவிய ரீதியில் தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டினை முன்னிட்டு எதிர்வரும் மூன்று நாட்களுக்கு மின் விநியோகத்தடை அமுல்படுத்தப்பட மாட்டாது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதன்படி நாளை, நாளை மறுதினம் மற்றும் 15 ஆம் திகதிகளில் மின் விநியோகத்தடை அமுல்படுத்தப்பட மாட்டாது என குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், எதிர்வரும் 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் இரண்டு மணித்தியாலமும் 15 நிமிடங்களும் மாத்திரம் மின் விநியோகத்தடை அமுல்படுத்தப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, குறித்த திகதிகளில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரையான காலப்பகுதிகளில் இவ்வாறு மின் விநியோகத்தடை அமுல்படுத்தப்படுமென இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *