
நெடுந்தீவு, ஏப் 12
இந்தியாவிலிருந்து இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்த படகுகளை முற்றுகையிட முயற்சித்தபோது,
கடற்படை படகுகள் 2 ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
சம்பவத்தில் 4 கடற்படைச் சிப்பாய்கள் கடலில் தவறி விழுந்ததாகவும் அவர்களில் மூவர் மீட்க்கப்பட்டபோதும்
ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் காணாமல்போன கடற்படை சிப்பாய் தேடும் பணிகள் கடற்படையினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் மீட்கப்பட்ட 3 கடற்படை சிப்பாய்களின் இருவர் காயமடைந்த நிலையில் ஊர்காவற்றுறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இதேவேளை கடற்படையினர் முற்றுகையிட்ட படகுகளில் ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.