
நாட்டில் தற்போது சில அத்தியாவசிய மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு அவசர நிதியாக 10 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க உலக வங்கி அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நிதியமைச்சர் அலி சப்ரியுடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு வார காலப்பகுதியில் எரிவாயு, மருந்து மற்றும் இதர அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு 500 மில்லியன் டொலர்களை வெளியிட உலக வங்கி ஒப்புக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.