சாந்த பண்டார பதவிப் பிரமாணம் செய்து துரோகமிழைத்துள்ளார்! சுதந்திரக் கட்சி சாடல்

விவசாயத்துறை இராஜாங்க அமைச்சராக சுதந்திரக் கட்சியின் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார பதவியேற்றுள்ளார்.

இந்நிலையில் அமைச்சராகப் பதவிப் பிரமாணம் செய்து கட்சியின் கொள்கைகளுக்கு துரோகம் இழைத்துள்ளதாக ரோஹன லக்ஷ்மன் பியதாச தெரிவித்துள்ளார்.

சசீந்திர ராஜபக்ச தனது இராஜாங்க அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து அவரது பதவிக்கு சாந்த பண்டார நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை பிரியங்கர ஜயரத்னவின் இராஜினாமாவை ஜனாதிபதி ஏற்க மறுத்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி, அவர் தொடர்ந்து வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு மற்றும் சந்தை பல்வகைப்படுத்தல் இராஜாங்க அமைச்சராக செயற்படுவார்.

மேலும் புதிய அமைச்சரவை இன்று பதவியேற்க உள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *