
அரசுக்கு எதிராக நாடளாவிய ரீதியில் பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அதேவேளை காலிமுகத்திடல் மற்றும் ஜனாதிபதி செயலகம் முன்றலிலும் இரவு பகலாக தொடர்ச்சியாக அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகின்றது.
இந் நிலையில் ஆயிரக்கணக்கான இளைஞர் யுவதிகள் என பல்வேறு தரப்பினரும் இனைந்து அரசுக்கு எதிராக ‘கோ ஹோம் கோட்டா’ என்றவாறாக கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகின்றது.
இதேவேளை அவ் வீதி வழியே செல்கின்ற பாரிய வாகனங்களில் ஏறிநின்றும் அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோசங்களை எழுப்பி வருகின்ற அதேவேளை ஆர்ப்பாட்டக்கார்களுக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.