
யாழ், ஏப் 12
யாழ்ப்பாணம் – நவாலி பகுதியில் முச்சக்கர வண்டி ஒன்று வன்முறை கும்பலால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் உள்ள வீடொன்றினுள் நேற்றைய தினம் (11) இரவு 2 உந்துருளிகளில் வந்த 6 பேர் கொண்ட வன்முறை கும்பலொன்று இந்த தாக்குதல் சம்பவத்தை மேற்கொண்டுள்ளது.
வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த முச்சக்கர வண்டியை அடித்து நொறுக்கி, அதற்கு தீ வைத்து பின்னர் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.
இதனை தொடர்ந்து, சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது. மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.