
கொழும்பு, ஏப் 12
நேற்றைய தினம் விவசாய இராஜாங்க அமைச்சராக பதவியேற்றுக்கொண்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார அக்கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.
கட்சியின் கொள்கைகளுக்கு துரோகம் இழைத்துள்ளதாக சுதந்திர கட்சி குற்றம் சாட்டியிருந்தது. இந்நிலையில் அவரை கட்சியின் அனைத்து பதவிகளில் இருந்தும் நீக்குவதாக சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திஸாநாயக்க அறிவித்துள்ளார்.