JUST_IN: ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை இல்லை: சுயாதீன எம்.பிக்கள் குழு அதிரடி தீர்மானம்

ஜனாதிபதியுடன் இன்று நடைபெறவுள்ள கலந்துரையாடலை புறக்கணிப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சுயாதீனமாக செயற்பட்டுவரும் எம்.பிக்கள் குழு தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர இதனைத் தெரிவித்துள்ளார். இதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சகல பதவிகளில் இருந்தும் சாந்த பண்டாரவை நீக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதோடு, அவருக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவுள்ளதாக தயாசிறி ஜயசேகர எம்.பி குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *