புதையல் தேடிய யாழ் பூசாரி, பெரமுன நகரசபை உறுப்பினர் உள்ளிட்ட 6 பேர் அதிரடியாக கைது

ஆராச்சிக்கட்டுவ – மானாவெரிய பிரதேசத்தில் உள்ள காணியில் புதையல் தேடிக் கொண்டிருந்த யாழ் பூசாரி, பெரமுன நகரசபை உறுப்பினர் உள்ளிட்ட 6 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் சிலாபம் நகரசபை உறுப்பினர், அவரது இரண்டு மகன்கள் மற்றும் யாழ்ப்பாணம், கண்டியைச் சேர்ந்த மூவரே சிலாபம் குற்றப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதானவர்களுள் யாழ்ப்பாணத்தை சேர்ந்த பூசாரியும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

புதையல் தோண்ட பயன்படுத்தப்பட்ட கருவிகள், பலி கொடுக்கப்பட்ட இரண்டு கோழிகள் மற்றும் பிரசாத தட்டுகள் கைப்பற்றப்பட்டன.

சந்தேகநபர்கள் ஆராச்சிக்கட்டுவ, மானாவெரிய பிரதேசத்தில் புதையல் தேடி குழி தோண்டிக் கொண்டிருந்த போது, ​​கிடைத்த இரகசிய தகவலையடுத்து பொலிசார் சுற்றிவளைத்து அவர்களை கைது செய்தனர்.

இதனையடுத்து கைதான சந்தேக நபர்களை பொலிஸார் நீதிமன்றில் முற்படுத்திய நிலையில் சிலாபம் நீதவான் ஏப்ரல் 20 வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *