
அனைத்து சாதாரண கடன் சேவைகளையும் இடைக்காலத்திற்கு இடைநிறுத்த இலங்கை அரசு தீர்மானித்துள்ளது.
இதன்படி, சர்வதேச நாணய நிதியத்தின் உதவியுடன் வழங்கப்படும் நிதியுதவி கிடைத்தவுடன் மீண்டும் கடன் வழங்கும் சேவை ஆரம்பிக்கப்படும் என நிதியமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று நிலுவையில் உள்ள அனைத்து கடன்களுக்கும் இது பொருந்தும் என்று அமைச்சுக் குறிப்பிட்டுள்ளது.
அதனடிப்படையில், இலங்கை அரசு சர்வதேச மூலதனச் சந்தைகள் ஊடாக வழங்கப்படும் பத்திரங்களை வழங்குவதை இடைநிறுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது.
இலங்கை அரசு வேறு அரசுடன் அல்லது வெளிநாட்டு மத்திய வங்கியுடன் செய்த கடன்கள் அல்லது பரிமாற்றங்கள் உட்பட அனைத்து சாதாரண கடன்களும் மறு அறிவிப்பு வரை நிறுத்தப்பட்டுள்ளன.