காணாமல் போன மகனை தேடியலைந்த தந்தை உயிரிழப்பு!

இறுதி யுத்தத்தின்போது காணாமல் போன தனது மகனை 12 ஆண்டுகளுக்கு மேலாக தேடிவந்த தந்தை முல்லைத்தீவு மாவட்டத்தில் உயிரிழந்துள்ளார்.

முல்லைத்தீவு முள்ளியவளை பூதன் வயல் கிராமத்தினை சேர்ந்த முனியாண்டி கறுப்பையா என்ற தந்தை கடந்த கால யுத்த நிலையில் தனது மகனான மோகனதாஸ் காணாமல் போன நிலையில் அவரை தேடி தவித்து வந்துள்ளார்கள்.

இன்னிலையில் குறித்த தந்தை 11.04.2022 அன்று உயிரிழந்துள்ளார்.

வடக்கு கிழக்கு பகுதிகளில் காணாமல் போன தமது பிள்ளைகளை தேடி அலையும் பெற்றோர்கள் பலர் தமது பிள்ளைகளை தேடி தேடி சுகயீனம் அடைந்து உயிரிழந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *