
வர்த்தகர்கள் தாங்கள் விரும்பிய விலைகளில் பொருட்களை விற்பனை செய்து வருவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்ட பொருட்களுக்கான கட்டுப்பாட்டு விலை நீக்கப்பட்டுள்ள நிலையில், வர்த்தகர்கள் தாங்கள் நினைத்த விலைகளில் பொருட்களை விற்பனை செய்கின்றனர் எனவும் நுகர்வோர் பெரும் பாதிப்புக்களை எதிர்நோக்கி வருவதாகவும் தெற்கு ஊடகமொன்று குற்றம் சுமத்தியுள்ளது.
சந்தையில் பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சம் காரணமாக அமைச்சரவையினால் கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக கட்டுப்பாட்டு விலை நீக்கப்பட்டது.
ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி, காப்புறுதி கட்டணங்கள், தாமதக் கட்டணங்கள் உள்ளிட்ட காரணிகளினால் இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலைகள் பாரியளவில் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சில வர்த்தகர்கள் தாங்கள் நினைத்த நினைத்த விலைகளுக்குப் பொருட்களை விற்பனை செய்வதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு கூடுதல் விலைக்குப் பொருட்களை விற்பனை செய்வோருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது நடைமுறைச் சாத்தியமில்லை என நுகர்வோர் விவகார அதிகார சபையின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.