SLFP தலைமையகத்திற்கு முன்பாக பதற்றமான சூழ்நிலை

ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்திற்கு முன்பாக பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன தலைமையகத்திற்கு வந்ததையடுத்து, இந்த சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, நிலைமையை கட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியில், ஆர்ப்பாட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *