வடமாகாண மாணவர் படையணியில் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி தேசிய போட்டிற்கு தெரிவு!

இலங்கை தேசிய மாணவர் படையணியின் பொலீஸ் பிரிவின் கீழ் உள்ள மாணவர் படை பிரிவில் வடமாகாணத்தில் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி முதல் இடத்தினை பெற்று தேசிய போட்டிக்கு தெரிவாகியுள்ளது.

தேசிய மாணவர் படையணியின் கீழ் பொலீஸ் பிரிவினரால் பாடசாலைகளில் 14 அகவைக்கு மேற்பட்ட மாணவர்களுக்கான மாணவர் படைஅணி கட்டுமானத்தினை வளர்த்தெடுக்கும் நடவடிக்கைகள் இந்த ஆண்டும் நடைபெற்றுள்ளன.

வடமாகாணத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மாணவர்கள் அதிக புள்ளிகளை பெற்று தேசிய போட்டிக்கு தெரிவாகியுள்ளார்கள்.

புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மாணவர்களுக்கான மாணவர் படைஅணி கட்டுமான பயிற்சிகளை புதுக்குடியிருப்பு பொலீஸ் நிலைய உத்தியோகத்தர் ஏ.கோகுலன் நெறிப்படுத்தலில் பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.கேரத்
வழிகாட்டலில் அதிபர்கள், ஆசிரியர்களின் பங்களிப்புடனும் மாணவர்கள் பெற்றோர்களின் ஒத்துளைப்புடனும் பயிற்சிகள் வழங்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், கடந்த வாரம் போட்டிகள் நடைபெற்றுள்ளன.

உடற்பயிற்சி, பொதுஅறிவு பரீட்சை,மாணவர் படை அணிக்குரிய அணிநடை உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் ஊடான போட்டிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வடமாகாணத்தில் அதிக புள்ளிகளை பெற்று முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு மத்தியகல்லூரி மாணவர் அணி தெரிவாகியுள்ளது.

மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு 12.04.2022 பாடசாலையில் நடைபெற்றுள்ளது.

பாடசாலை அதிபர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், முல்லைத்தீவு மாவட்ட பொலீஸ் அத்தியட்சகர் புதுக்குடியிருப்பு பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி, பாடசாலை அதிபர்கள் உடற்பயிற்சி ஆசிரியர்கள் மாணவர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார்கள்.

இனிவரும் காலங்களில் தேசியரீதியில் நடைபெறும் மாணவர் படைஅணி போட்டியில் வடமாகாணத்தில் இருந்து முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மத்தியகல்லூரி அணி பங்குபற்றவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *