கிழக்கில் ரஷ்யாவின் தாக்குதல்களை முறியடித்துள்ளதாக உக்ரேனிய படைகள் அறிவிப்பு

உக்ரைனின் கிழக்கு எல்லைக்கு அருகே ரஷ்யாவில் எதிரிப் படைகள் மீண்டும் ஒருங்கிணைத்து வருவதாக உக்ரேனிய ஆயுதப்படைகள் தெரிவித்துள்ளன.

ரஷ்யா கிழக்கில் புதிய தாக்குதலுக்கான தயார்படுத்தல்களுக்காக இராணுவ வாகனங்களை நகர்த்தி வருவதாகவும் உக்ரைனின் இராணுவம் அறிவித்துள்ளது.

இருப்பினும் டோனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் பகுதிகளில், ஆறு தாக்குதல்களை முறியடித்ததாகவும், நான்கு டாங்கிகள், பல ரஷ்ய வாகனங்களை அழித்ததாகவும் உக்ரைனின் இராணுவம் கூறுகிறது.

மேலும் ஒரு விமானம் மற்றும் இரண்டு ஹெலிகாப்டர்கள் உட்பட ஏழு வான் இலக்குகளைத் தாக்கியதாகவும் உக்ரைனின் இராணுவம் அறிவித்துள்ளது.

டான்பாஸ் பிராந்தியத்தில் ரஷ்யா தனது துருப்புக்களின் எண்ணிக்கையை இரட்டிப்பாக அல்லது மும்மடங்காக அதிகரிக்கும் என மேற்கத்திய நாடுகளின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *