ஜனாதிபதியுடனான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையில் பங்கேற்பதில்லை

இடைக்கால அரசாங்கத்தை அமைப்பது தொடர்பான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையில் பங்கேற்பதில்லை என அரசாங்கத்தில் இருந்து விலகிய 11 கட்சிகள் அறிவித்துள்ளன.

தற்போதைய அரசாங்கம் முழுமையாக இராஜினாமா செய்து இடைக்கால அரசாங்கத்தில் உண்மையான அக்கறை காட்ட வேண்டிய தேவை இருப்பதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஜனாதிபதி நேற்று புதிய இராஜாங்க அமைச்சர் ஒருவரை நியமித்துள்ள நிலையிலேயே இவ்வாறானதொரு தீர்மானத்தை எடுத்ததாகவும் 11 கட்சிகளும் தெரிவித்துள்ளன.

அனைத்து கட்சிகள் அடங்கிய இடைக்கால அரசாங்கம் அமைப்பது தொடர்பாக ஜனாதிபதியுடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதலாவது கலந்துரையாடல் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *