
கொழும்பு, ஏப் 12
இந்தியாவில் இருந்து 11,000 மெட்ரிக் தொன் அரிசி, சென் குளோரி என்ற கப்பலில் இன்று கொழும்பை வந்தடைந்தது என இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
இந்தியாவிடமிருந்து அதிகப்படியான உதவிகள் இலங்கைக்கு கிடைக்கப்பெறுவதுடன் இந்தியா வழங்கிய கடனுடதவி மேலும் மூன்றுவார காலத்திற்கே போதுமானது என நிதியமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.