வடக்கு மாகாணத்தில் வெள்ளி வரை கனமழை!

மன்னார் வளைகுடா பகுதியில் நிலவும் காற்று சுழற்சி காரணமாக எதிர்வரும் 15.04.2022 வெள்ளிக்கிழமை வரை வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் பரவலாக மிதமானது முதல் கனமானது வரை மழை கிடைக்க வாய்ப்புள்ளதாக யாழ். பல்கலைக்கழகத்தின் புவியியல்துறை விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா கூறியுள்ளார்.

குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டம் மற்றும் மன்னார் தீவு உட்பட்ட மேற்கு கரையோரப் பகுதிகள் ஏனைய பகுதிகளை விட சற்று கூடுதலான அளவு மழையைப் பெறுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் இதனைக் கருத்தில் கொண்டு செயற்படுவது நன்மை பயக்கும் என அவர் தெரிவித்துள்ளார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *