நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டு நிலைமை காரணமாக ஆழ் கடல் மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர்.
திருகோணமலை கரையோர மீனவர்கள் மண்ணெண்ணெய் மூலமாக தங்களது இயந்திர படகை பயன்படுத்தி வரும் நிலையில் மண்ணெண்ணெய் தட்டுப்பாட்டால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
மண்ணெண்ணெயை பெற நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை சில வேலை வெருங்கையுடன் வீடு திரும்ப வேண்டியுள்ளதுடன் அன்று கடலுக்கு செல்ல முடியாது இதனால் தொழில் பாதிக்கப்படுகிறது எனவும் தெரிவிக்கின்றனர்.
இரவு நேரங்களில் கண்விழித்து கடல் தொழிலில் ஈடுபட்டு மீண்டும் கடலுக்கு செல்வதாக இருந்தால் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசையில் காத்திருந்து பல மணி நேரங்கள் காலத்தை கடக்க வேண்டியுள்ளது.
இயந்திரம் மூலமாக மீனவப் படகில் ஈடுபடுவோருக்கு மண்ணெண்ணெயை இலகுவாக பெறுவதற்கு உரிய அதிகாரிகள் வழி செய்து தருமாறும் மீனவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

