தமிழ்,சிங்கள புத்தாண்டை முன்னிட்டு சமுர்த்தி அபிமானி விற்பனை சந்தை கிண்ணியா ஆலங்கேணி பகுதியில் திறந்து வைக்கப்பட்டது
சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களமும்,சமுர்த்தி மகா சங்கம் கிண்ணியா பிரதேச செயலகம் இணைந்து ஏற்பாடு செய்த இக் குறித்த சந்தை இன்று (12) கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.ஹனியினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. புத்தாண்டை முன்னிட்டு அத்தியவசிய நுகர்வுப் பொருட்களை சலுகை விலையில் சமுர்த்தி விற்பானையாளர்களிடமிருந்து மக்கள் பெற்றுக் கொள்ளக்கூடிய வகையில் இது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதன் போது மக்கள் பொருட்களை கொள்வனவு செய்து வருவதனை காணக்கூடியதாகவுள்ளது.
இதில் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் , பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


