
சிங்கள மக்களுக்கு அஞ்சி முடிவுகளை மாற்றும் நிலையில் கோட்டாபய இருப்பதாக கனடாவில் இருக்கும் அரசியல் ஆய்வாளர் நேரு குணரட்னம் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் போராட்டங்கள் வியாபிக்க ஆரம்பித்த காலத்தில் கோட்டாபய ராஜபக்ச தன்னுடைய இராணுவ பரிவாரங்களை தனக்கு சார்பாக இவ்வாறான விடயங்களில் பயன்படுத்திக் கொள்வாரா என்கின்ற கேள்வி இருந்தது.
ஒரு இராணுவமயப்படுத்தப்பட்ட ஆட்சி முறைமைக்கு அவர் நாட்டை இட்டுச் செல்வாரா என்ற சந்தேகம் நிலவி வந்தது.
ஆனால் தொடரும் மக்கள் போராட்டங்கள் ஒன்றை தெளிப்படுத்தியுள்ளது, சிங்கள மக்களுக்கு எதிராக எந்த விதத்திலும் அவ்வாறு நடந்து கொள்ள கோட்டாபய தயாராக இல்லை என்பதை.
இலங்கை இராணுவம் மக்களின் நெருக்குவாரமாக மாறுமா என்றால் நிச்சயம் பதில் இல்லை என்பது வெளிப்படுத்தப்பட்டு விட்டது.
சிங்கள மக்களுக்கு அஞ்சி முடிவுகளை மாற்றும் நிலையில் கோட்டாபய இருக்கிறார். ஏனெனில் சிங்கள மக்களை தங்கி தான் அவருடைய இருப்பு இருக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.