கொழும்பு – கொட்டாஞ்சேனை பகுதியிலுள்ள எரிபொருள் நிலைய வளாக பகுதியில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.
குறித்த எரிபொருள் நிலையத்தில் காலையிலிருந்து தொடர்ச்சியாக மண்ணெண்ணெய் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் மண்ணெண்ணெய் பெற்றுக் கொள்வதற்காக தொடர்ந்தும் வரிசையில் பெருந்திரளான மக்கள் காத்திருக்கின்றனர்.
இவ்வாறான சூழ்நிலையில் மண்ணெண்ணெய் முடிந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டதையடுத்தே குழப்பம் ஏற்பட்டுள்ளது.
வரிசையில் நின்ற மக்கள் எரிபொருள் நிலையத்தை முற்றுகையிட்டுள்ளனர்.

