தமிழ் – சிங்கள புத்தாண்டை முன்னிட்டு புத்தளம் மாவட்டத்தில் மக்கள் மிகவும் ஆர்வத்துடன் பொருட்களை கொள்வனவு செய்து வருவதனை அவதானிக்க முடிகின்றது.
அத்துடன், புத்தளம் நகர சுற்று வட்டத்தை அண்டிய பகுதிகளில் புதுவருடத்தை முன்னிட்டு விஷேடமாக அமைக்கப்பட்டுள்ள சந்தைக் கடைத் தொகுதிகளும் , வீதியோர நடைபாதை வியாபார நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
ஆடைகள், மட்பாண்டங்கள், பட்டாசுக் கடைகள், மரக்கறி கடைகள், சிற்றுண்டி கடைகள், பழ வகைகள் என பெரும் எண்ணிக்கையிலான கடைகளும் காணப்படுகின்றன.
கடந்த வருடத்தை விடவும் இம்முறை புதுவருடத்திற்காக ஆடை உள்ளிட்ட பொருட்களை கொள்வனவு செய்வதில் அதிக ஆர்வம் காட்டி வருவதுடன், தமது வியாபாரமும் அதிகளவில் காணப்படுவதாகவும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
