நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடியினை தீர்க்கக் கோரி தனி நபர் போராட்டமொன்று திருகோணமலை மாவட்டம் கிண்ணியாவில் இடம்பெற்றது.
இலங்கையின் மிக நீளமான கடல் மேல் பாலம் மீது ஏறி இன்று முன்னெடுக்கப்பட்ட இப்போராட்டமானது, கிண்ணியா நகர சபை உறுப்பினரும், சமூக ஆர்வலருமான எம்.எம்.மஹ்தி ஏற்பாடு செய்தார்.
பாலத்தின் மீது சமையல் எரிவாயு, பால்மா, எரிபொருள் கேனினையும் கொண்டு தனது எதிர்ப்பினை வெளியிட்டார்.
அரசே உனது எரிபொருள் சுமை, பொருளாதார சுமை, பொருட் தட்டுப்பாடு, விலை ஏற்றம், விவசாயிகளை வதைத்தமை, பண அச்சடிப்பு, பண வீக்கம் எம்மையும் சந்ததிகளையும் அழித்தது போதும் வீடு செல்
பொது மக்களின் உணர்வுகளுக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் போராட்டங்களுக்கும் மதிப்பளித்து Goata Go Home, Bazil Go Home போன்ற வாசகங்களை பதாகைகளில் ஏந்தியவாறும் போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதன் பின் ஊடகங்களுக்கும் கருத்து தெரிவித்தார்.
எரிபொருள் எரிவாயு எல்லாவற்றும் நீண்ட வரிசையில் நிற்க வேண்டியுள்ளது. வீடுகளில் மனைவி பிள்ளைகள் எரிவாயு இன்றி வீட்டுக்கு வர வேண்டாம் எனவும் கூறுகின்றனர். இதனை கருத்திற் கொண்டு அரசாங்கம் பதவி விலக வேண்டும்.- என்றார்.
