
உக்ரைன், ஏப் 12
ரஷ்யாவின் தாக்குதலினால் சின்னா பின்னமாகி உருக்குலைந்து சிதைந்து போயுள்ள உக்ரைன் நகரங்கள் மற்றும் மக்களின் மீள் கட்டுமானம் மற்றும் எதிர்கால வாழ்வு போன்றவற்றை கருத்தில் கொண்டு உலக நாடுகள் மற்றும் தனியார் கொடையாளிகளினால் வழங்கப்படும் நன்கொடைகளை பராமரிப்பதற்காக விசேட கணக்குப் பிரிவொன்றை ஆரம்பிப்பதற்கான ஆலோசனை மற்றும் அனுமதியினை சர்வதேச நாணய நிதியம் International Monetary Fund வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அண்மையில் மேற்படி மீள் கட்டுமானத்திற்காக கனேடிய அரசு வழங்கியுள்ள 790,000 அமெரிக்க டொலர்களைத் தொடர்ந்து மேற்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தொடர்ந்து உக்ரைனுக்கான கொடையாளிகள் எந்த சிரமுமின்றி தங்களது நிதி உதவிகளை சர்வதேச நாணய நிதியின் குறிபிட்ட பிரிவில் வைப்பிலிட முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
இதனால் சர்வதேச நாணய நிதியம் பல்வேறு விசேட சலுகைகளை கொடையாளிகளுக்கு வழங்க முன்வந்திருப்பதாகவும் இந்த செயற்பாடானது மிகவும் வரவேற்க்கத்தக்கதொன்று எனவும் உக்ரைனிய நிதி அமைச்சு தெரிவித்திருந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.