
காலி, ஏப் 12
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு மத்தியில் பல்வேறு போராட்டங்கள் முனைப்பு பெற்றுள்ளன.
இந்நிலையில் காலி வீதியில் ஆர்ப்பாட்டக்காரர்கள் சமையல் எரிவாயு சிலிண்டர் கோரி வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக அததெரண செய்தியாளர் தெரிவித்தார்.
எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக காலி – மாபலகம வீதி கராப்பிட்டி சந்தியில் முற்றாகத் தடைப்பட்டுள்ளது.