ராஜபக்‌ஷ அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து புத்தளத்தில் ஆர்ப்பாட்டப்பேரணி!

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருட்களின் விலையேற்றம் கண்டித்தும் ராஜபக்‌ஷ அரசு பதவியை விட்டு விலக வேண்டுமென்று தெரிவித்து இன்று புத்தளம் ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

குறித்த ஆர்ப்பாட்டம் புத்தளம் ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டு பேரணியாக புத்தளம் கொழும்பு முகத்திடலை சென்றடைந்தது.

குறித்த ஆர்ப்பாட்டம் செடெக் எனும் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், புத்தளம் மாவட்ட சர்வமதத் தலைவர்கள், ஆயர்கள் குருக்கள், அருட்சகோதரிகள் மற்று தனியார் அமைப்புக்கள் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கோஷங்களை எழுப்பியவாறு பதாதைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது புத்தளம் பொலிஸ் நிலையத்தினால் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டதையும் காணக்கூடியதாக இருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *