கிண்ணியா – ஈச்சந்தீவு கிராம சபை வளாகத்தில் சமையல் எரிவாயு வினியோகம் இடம்பெறப் போவதாக கேள்வியுற்ற மக்கள் இன்று காலை 7 மணி தொடக்கம் வெற்றுச் சிலிண்டருடன் காத்திருந்த போதும், கடைசி வரை சமையல் எரிவாயு கிடைக்காததால் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
சமையல் எரிவாயு வரும் என்ற தகவல் பரவியதையடுத்து, வயாதனவர்கள், பெண்கள், ஆண்கள் என பலரும் வெயிலுக்கு மத்தியில் கார்த்திருந்தபோதும் எரிவாயு வழங்கும் வாகனம் வராமையால் ஏமாற்றமடைந்த மக்கள் வீடுகளுக்கு திரும்பிச் சென்றமை குறிப்பிடத்தக்கது.
