
புத்தளம் – தப்போவ நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் வேகமாக அதிகரித்து வருவதால் இன்று இரண்டு வான் கதவுகள் தலா 6 அங்குல வீதம் திறக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட நீர்ப்பாசன திணைக்கள அலுவலகம் தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாக தப்போவ நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் பாரியளவில் அதிகரித்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களத்தின் கடமை நேர அதிகாரியொருவர் தெரிவித்தார்.
இதன் காரணமாக நீர்த்தேக்கத்தின் நீர்மட்டத்தை முறையாக பராமரிக்க இவ்வாறு தப்போவ நீர்த்தேக்கத்தின் வான்கதவுகளை திறக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இவ்வாறு வெளியேற்றப்படும் நீர் மீ ஓயா ஊடாக புத்தளம் களப்பு பகுதியில் விழுவதால் வெள்ள நிலைமை ஏற்படாது எனவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.