புத்தாண்டின் பின்னர் மைத்திரி மேற்கொள்ளப்போகும் நடவடிக்கை

புத்தாண்டின் பின்னர் அரசாங்கத்தினால் வழங்கப்படும் புதிய வீட்டில் குடியேறவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதியாக இருந்து பெற்ற வீட்டை நான்கு வாரங்களுக்குள் காலி செய்யுமாறு நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த வீட்டை விட்டு வெளியேறவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த வீடு தொடர்பான நீதிமன்ற உத்தரவை சிலர் தம்மை அவதூறாகப் பேசுவதாகவும், தாம் அந்த வீட்டை சொந்தமாக்க முயற்சித்ததாக மேற்கொள்ளப்படும் பிரச்சாரத்தில் உண்மையில்லை, அந்த வீடு 800 மில்லியன் ரூபா பெறுமதியான சொகுசு வீடு அல்ல எனவும் முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *