
கோட்டா அரசுக்கு எதிராக காலி முகத்திடலில் இன்று நான்காவது நாளாக போராட்டம் இடம்பெற்று வருகிறது.
இரவு பகல் பாராது, போராட்டம் இடம்பெறுகிறது.இந்த நிலையில் அரசில் முக்கிய பொறுப்புகளில் உள்ளவர்களின் படங்கள் வேடிக்கையாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கை சீனாவுக்குள் மூழ்வது போன்றும், ஜனாதிபதி கோட்டா முயல் குட்டி போன்றும், முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் கப்ரால் மூளையை கழற்றி கீழே வைத்திருப்பது போன்றும், இராணுவத் தளபதி ஜோக்கர் போன்றும் சித்தரிக்கும் படங்கள் போராட்டக்களத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.