
கொழும்பு, ஏப் 12
வெளிநாடுகளில் இருந்து பணம் அனுப்பும் போது இலங்கை வங்கி முறையை பயன்படுத்துமாறு வெளிநாடு வாழ் இலங்கையர்களிடம் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.
கொழும்பில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய மத்திய வங்கியின் ஆளுநர், கறுப்புச் சந்தை வர்த்தகத்தின் ஊடாக எந்தவொரு வெளிநாட்டு நாணயத்தையும் இலங்கைக்கு அனுப்பக்கூடாது எனத் தெரிவித்தார்.
அனைத்து வெளிநாட்டுக் கடன் தீர்வுகளையும் இடைநிறுத்துவதற்கான இலங்கையின் தீர்மானத்திற்கு சர்வதேச ஊடகங்கள் உடனடியாக முக்கியத்துவம் அளித்துள்ளன.
இதேவேளை, கடனைத் திருப்பிச் செலுத்துதல் மற்றும் பண மதிப்பிழப்பு விவகாரம் தொடர்பில் ஆராய தெரிவுக்குழுவைக் கூட்டுமாறு ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்திடம் இன்று கோரிக்கை விடுத்துள்ளது.