7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு!

மழையுடனான வானிலை நீடித்து வரும் நிலையில் 7 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களம் இது தொடர்பில் தெரிவிக்கையில்,

நாட்டின் 7 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பு மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகம் அறிவித்துள்ளது.

ஆபத்தான பிரதேசங்களில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக அடைமழை நிலவுமாயின் ஆபத்தான பிரதேசங்களில் உள்ள மக்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டுமென்று நிறுவகம் அறிவுறுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *