புத்தாண்டு காலத்தில் விபத்துக்களை குறைக்க நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தல்

புத்தாண்டு காலத்தில், விபத்துக்களைக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சுகாதாரத் துறை பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

பண்டிகைக் காலத்தில், பட்டாசு உட்பட கேளிக்கை வெடிகள் மூலம் ஏற்படும் விபத்துக்கள் அதிகளவில் பதிவாகுவதாக, கொழும்பு தேசிய வைத்தியசாலையின், தேசிய பயிற்றுவிப்பு அதிகாரி புஷ்பா ரம்யாணி சொய்ஸா தெரிவித்துள்ளார்.

வீடுகளில் தற்போது பெற்றோல் சேமித்து வைக்கப்படுகின்ற நிலையில், தேங்காய் எண்ணெய்க்கு பதிலாக, பெற்றோலைப் பயன்படுத்தியமையால் விபத்து ஏற்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, இது குறித்து பொதுமக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும் என கொழும்பு தேசிய வைத்தியசாலையின், தேசிய பயிற்றுவிப்பு அதிகாரி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *